Friday, October 9, 2009

டவுட் டனபாலு, கிச்சடி.

எந்த செய்தியானாலும் படம் புடிச்சு போடும் தினமலர் , எடிட்டர் கைது செய்ததை படம் பிடிக்காம ஏன் விட்டார்கள், இத்தனைக்கும் அவர்கள் அலுவலத்தில் தான் நடந்துருக்கு, அத்து மீறி போலீஸ் நுழைந்தார்கள், வார்ரன்ட் இல்லாம வந்தார்கள் அப்படின்னு செய்தியை மட்டும் போடறாங்க. நம்ம சாணக்கிய முதல்வரை "அம்மா" கைது பண்ணும் பொது அவர்களை சேர்ந்தோர் எப்படி படம் பிடித்து காமிச்சாங்க. அப்படில இருக்கனும். என்னப்பா லெனின் நடிகை படம் போட தெரிந்த உங்களுக்கு, உங்கள் கைது படம் எடுக்க முடியாமல் போன காரணம் தான் என்ன?

மூடப்பட்டுள்ள "ஸ்பிக்' ஆலையை ஒரு மாதத்தில் திறக்க நடவடிக்கை --தினமணி (ஆமாங்க இப்பலாம் தினமலர் படிக்கிரதில்லை ) . இது நடப்பதற்கு எங்க ஊரு அமைச்சருக்கு முக்கிய பங்காம், இந்த விஷயத்தில் எந்த கேள்வியும் இல்லை, ஏன்னா அவர் எங்க ஊருகாரர்.

ஹிட்லர் மண்டை ஓடுன்னு சொல்லி ரஷ்யாவில் வைத்திருகிறார்கள், இதை ஆராய்ச்சி செய்த அமெரிக்கர்கள், ஒரு ஆணின் மண்டை ஒடுகான கணம் இல்லையாம் அதில், அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம்னு சொல்றாங்க. உண்மையிலே அது அவர் மண்டை ஓடா இருந்தா ஹிட்லர் தலைகணம், திமிரு இல்லாத ஒரு கொடுங்கோல் அதிபரா இருப்பாரோ ?

வாரா வாரம் என்னுடைய பதிவில் ஒரு பொது அறிவு கேள்வி கேட்கலாம்னு இருக்கேன். வருட முடிவில் நிறைய பதில் சொன்னவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்.
இந்த படத்தில் இருக்கும் இந்தியர் யார், இவருக்கும் சுதந்திர போராட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கு
உன்டு. என்னுடைய ஆங்கில பதிவில் இந்த கேள்வி கேட்டு யாரும் பதில் சொல்ல வில்லை, நீங்கள் முயற்சித்து பாருங்கள்.



6 comments:

மணிகண்டன் said...

***
வாரா வாரம் என்னுடைய பதிவில் ஒரு பொது அறிவு கேள்வி கேட்கலாம்னு இருக்கேன். வருட முடிவில் நிறைய பதில் சொன்னவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்.
***
இது எல்லாம் ரொம்ப ஓவரு. வாராவாரம் நீங்க முதல்ல பதிவு எழுதறீங்களா பார்க்கலாம் :)-

லெனின் கைது செய்யும்போது படம் எடுத்தாங்க. நாளை மறுநாள் ரிலீஸ்.

சரி, உங்களுக்கு சாம் ஆண்டர்சனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?

Samuel | சாமுவேல் said...

//லெனின் கைது செய்யும்போது படம் எடுத்தாங்க. நாளை மறுநாள் ரிலீஸ்.//
அப்படியா, தவறா எழுதிட்டேனா.

//சரி, உங்களுக்கு சாம் ஆண்டர்சனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?//
அவர் யாருனே தெரியாதுங்க ! ஆனால் உங்களை ரொம்ப பாதித்தவருனு மட்டும் தெரியும்.

kanagu said...

/*எந்த செய்தியானாலும் படம் புடிச்சு போடும் தினமலர் , எடிட்டர் கைது செய்ததை படம் பிடிக்காம ஏன் விட்டார்கள், இத்தனைக்கும் அவர்கள் அலுவலத்தில் தான் நடந்துருக்கு, அத்து மீறி போலீஸ் நுழைந்தார்கள், வார்ரன்ட் இல்லாம வந்தார்கள் அப்படின்னு செய்தியை மட்டும் போடறாங்க. நம்ம சாணக்கிய முதல்வரை "அம்மா" கைது பண்ணும் பொது அவர்களை சேர்ந்தோர் எப்படி படம் பிடித்து காமிச்சாங்க. அப்படில இருக்கனும். என்னப்பா லெனின் நடிகை படம் போட தெரிந்த உங்களுக்கு, உங்கள் கைது படம் எடுக்க முடியாமல் போன காரணம் தான் என்ன?*/

ha ha ha.. nalla kaelvi...

yerkanave pattathellam pothum... padam poduratha niruthungada nu editor sollitaaroo ennavo ;)

ennanga kaelvi yellam kaekureenga.. athuku answer ah google la kooda theda mudiyathu pola irukke... avvvvvvv...

sathiyama yaarune theriyala..

vidaiya varusham mudivula arivikkaama konjam seekram arivicha enaku kaelvi nyabagam irukkum podhe answer ah sonna punniyam ungalukku kedaikkum ;)

Samuel | சாமுவேல் said...

kanagu
வருகைக்கு நன்றி, பாஸ்... புதுசா எழுத ஆரம்பிச்சுருக்கேன், தொடர்ந்து படிக்க வைக்க தான் கேள்வி, அடுத்த பதிவில் விடை இருக்கும். "ஜாலியன் வாளா பாக்" சம்பவத்துடன் தொடர்பு உள்ளவர் இவர்.

பீர் | Peer said...

சாம், ஒண்ணு சொல்லவா... முன்னமே சொன்னது தான்.

கேள்வி கேட்கிறது ரொம்ப ஈஸி.. ஆனா..

Unknown said...

சாம் ஆண்டர்சனுக்கு நீங்கதானே வசனம் எழுதிகொடுத்தீர்கள்!!!
அவர பத்தி தெரியனும்னா கீழ உள்ள "நீ குழாய்" (எல்லாம் உங்களலோட சேந்ததுக்கு அப்புறம்தான் !) தேடுதலுக்கு போங்கள்!! http://www.youtube.com/results?search_query=sam+anderson&search_type=&aq=0s&oq=sam+andres