Friday, January 29, 2010

ஹைடி, ஷாருக் பல்டி

ஐ.பி.எல்

இந்தியன் பிரீமியர் லீக் - அணி உரிமையாளர்கள் எல்லாரும் ஓட்டுக்க ஒரே ட்ராக்கில் போயிட்டு இருக்கும் பொது, திடீர்னு ஷாருக் கான் மட்டும் தடம் புரண்டு வேற ட்ராக்கில் ஓடிட்டு இருக்கார், பாகிஸ்தானி விளையாட்டு வீரர்கள் எடுக்காதது குறை கூறி, இவரே ஒரு சிலரை எடுக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த திடீர் ஞானோதேயத்தை, இந்திய -பாகிஸ்தான் நல்லுறவுகாக எடுக்க பட்ட முடிவுன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம்.அடுத்த மாதம் இவர் படம் ஒன்று வெளி வருதாம் "மை நேம் இஸ் கான்", இவருடைய சமீப கால படங்கள் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் இருந்தும், பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் இருந்தும் நல்ல வசூல் கிடைத்து இருப்பதால், அந்த வசூலில் பிரச்சினை வர கூடாதுன்னு ஹீரோ பம்முகிறார்.

'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்..

---

ஹைடி(haiti)

ஹைடி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, உலகத்தில் இருக்கும் முன்னணி கால்பந்து வீரர்கள் சேர்ந்து ஒரு மேட்ச் விளையாடினார்கள், இதில் ஜிடனே (zidane) ,ஹென்றி (henry),காகா(kaka)..என்று ஒரு பெரிய நட்சத்திர வீர்கள் கூட்டம் விளையாடினது, இந்திய அணி தலைவர் பைசுங் பூட்டியா  இதில் விளையாடி, ஒரு கோல் அடித்து கலக்கிருக்கார். மட்டைபந்து (கிரிக்கெட்) நட்சத்திரங்கள் சேர்ந்து இதே மாதிரி உதவி பண்ணா நல்லா இருக்கும். ஹைடி நிலநடுக்கத்தில் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை ரெண்டு லட்சம் இருக்கும்னு சொல்றாங்க.





சரி ...இப்ப நாம கேள்வி பகுதி..முடிந்தால் படத்தில் இருப்பவரை கண்டுபிடியுங்கள். நன்றி.


Wednesday, January 27, 2010

Sammy = சாமுவேல் | Samuel

ஆரம்பத்தில் பதிவர் ஒருவர் அவருடைய பதிவில் எனக்கு மறுமொழி எழுதும் போது 'சாமி' என்று அழைத்து பதில் எழுதினார், சரி 'sammy' என்ற ஆங்கில சொல்லை தவறுதலாக 'சாமி' என்று எழுதிட்டார் போல இருக்கு அப்படின்னு நினைச்சேன், ஆனா தொடர்ந்து நான் பின்னூட்டம் இடும் எல்லாருடைய பதிவுகளிலும் என்னை 'சாமி' என்றே பதிவர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஓரளவுக்கு பக்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும், 'சாமி' என்ற சொல் நமக்கு சற்றும் பொருந்தாத சொல்லாக இருக்கு (இதை கேட்டாவது திருந்தின வாழ்க்கை வாழு அப்படின்னு சொல்றீங்களா ..ரைட்டு.)

இதில் இன்னொரு கொடுமையான விஷயம், ஒரு காரா சாராமணா விவாதத்தில், ஏதோ புள்ளி விவரம் கொடுத்து என்னுடைய கருத்தை சொல்ல முயன்று கொண்டு இருந்தேன். அதற்கு எதிர் கருத்து சொன்ன நாத்திக நண்பர் ஒருவர் "சாமி" என்ற பெயரில் யாரவது ஏதாவது சொன்னால் நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லி என்னுடைய வாயை அடைச்சிட்டார்.

சென்ற இடுகையில் பலருக்கும் தமிழில் எழுத வழிகாட்டியா இருக்கும் மூத்த பதிவர் கோவியார், ஒரு அளவு மேல சென்று "சாமியோவ்" அப்படின்னு எழுதிட்டார். இதுக்கும் மேல 'அன்பே சிவம்' மேடி (maddy) மாதிரி முழிச்சிட்டு இருப்பது சரியா இல்லை. அதனால போர்க்கால அடிப்படையில் பெயர் மாற்றம் பண்ண வேண்டி ஆகிவிட்டது.

சாமுவேல் | Samuel

.

Wednesday, January 20, 2010

வீர, தீர விருது ...விளையாட்டு

சிறுவர்களுக்கான வீர செயல்கள் விருது இந்திய அரசால் (indian council for child welfare) அறிவிக்க பட்டு இருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 21 பேர் விருது பெற போகிறார்கள்.

க்ஹுமந்தேம், எட்டு வயது மணிப்புரி சிறுமி இவர், நான்கு வயது சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்த போது, நீச்சல் தெரியாத இவர் குதித்து காப்பாற்றி இருக்கார். இவருடைய தாயார் ஒரு மருத்துவர், இவருக்கும் மருத்துவர் ஆகனும் என்று ஆசை இருக்காம். கௌரவ் சிங்க், 13 வயது சிறுவன். ஐம்பது பேரை காப்பாற்றி இருக்காராம், பிரிட்டி தேவி 10 வயது சிறுமி அவர்களுடைய கடையில் வீசிய கை வெடிகுண்டை (grenade) சரியான சமயத்தில் அப்புறபடுத்தி, பல பேர் உயிரை காப்பாற்றி இருக்கார். இதை பற்றி செய்திகள் இங்கே.
 
நமக்கு இந்த வீர தீர செயல்கள் பன்னும் அளவிற்கு தைரியம் இருக்கானு தெரியலை, ஆனா இந்த வீர விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கு, ஒரு மாசம் முன்னதாகவே பயிற்சி ஆரம்பிச்சுட்டேன், இந்த வருடம் எங்க ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) பங்கு கொள்வதற்கு, இதில் நண்பர்கள் சிலரையும் உசுப்பு ஏத்தி விட்டாச்சு. ஆனா சரியா பாருங்க பொங்கல் சமயத்தில் ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. போகாததும் நல்லது தான் போல இருக்கு, இந்த வருடம் பார்வையாளர் கும்பலில் வேடிக்கை பார்த்த ஒருவரை தூக்கி வீசிருக்கு....முரட்டு காளை.

இந்த விருதுகள் என்றவுடன் மற்றொரு முக்கியமான விஷயமும் ஞாபகம் வருது, தமிழ்மணம் (blog aggregator), சிறந்த பதிவிற்கான போட்டி ஒன்று நடத்தியது, இந்த மாதிரி போட்டியில் பங்கு கொள்வதற்கு நமக்கு சுத்தமா அருகதை இல்லிங்கோ, நாம எழுதும் தமிழ் அந்த லட்சணத்தில் உள்ளது..என்னத்த பண்ண போங்க. சரி அதை விடுங்க ..இப்போ நாம முக்கியமான கடமை என்ன ? இந்த போட்டியில் பங்கு கொண்டவர்களையும், அதில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டுவது தான் வேற என்ன ....(கை தட்டு சத்தம்). நான் தொடர்ந்து படிக்கும் சில பதிவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், மகிழ்ச்சி. அதில் சிலர்..

ப்ருனோ -- இவர் 'மருத்துவரா'  இல்லை 'எழுத்தாளரா' அப்படின்னு ஒரு பெரிய குழப்பம் இருக்குங்க எனக்கு, வருடா வருடம் இவர் பாட்டுக்கு எல்லா பரிசையும் தட்டி செல்கிறார்.

கோவியர்- சிங்கப்பூர் கோவி.., பலராலும் மதிக்கபடும் மூத்த பதிவர், இவர் எழுதும் கருத்துகளுடன் இது வரை ஒத்து போனதாக எனக்கு ஞாபகம் இல்லை, இதினால் சில சமயம் இவரை சங்கட படுத்தியதும் உண்டு.

பீர் -- எங்க ஊர் காரர், இன்னும் இவரை சந்தித்ததில்லை, இவரையும் ஜல்லிக்கட்டு கூட்டிட்டு போறதாக உசுப்பு ஏத்தி இருந்தேன். இவர் பதிவு கார சார சண்டைகள் நடக்கும் ஒரு போர்க்களம்.

இப்ப நாம திருக்குறள் பகுதிக்கு செல்லலாம்.

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
 
விரிவுரை : தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது.

.

Saturday, January 9, 2010

குருவி படத்தில் Mr.Bean

Mr.Bean அனைவரும் விரும்பி பார்க்கும் பிரிட்டிஷ் காமெடி நடிகர், இவருடைய தனி திறமை பேசவே மாட்டார். இவர் மக்களை சிரிக்க வைப்பது வெறும் செயலினாலும், அவருடைய தோரனையினாலும் தான், அப்படியே ஏதாவது பேசினால் ஒன்னுமே புரியாத மாதிரி ஒரு சத்தம் மட்டுமே வரும், இருந்தாலும் வயிறு வலிக்க சிரிக்க மட்டும் வைத்துவிடுவார்....தமிழ் காமெடி நடிகர்கள் அதிகம் பேசினாலோ, உதை வாங்கினாலோ தான் நமக்கு சிரிப்பு வருது.

சரி எதற்கு ஒரு காமெடி நடிகரை வைத்து மொக்கை போடறேன்.. இன்னிக்கு காலைல இருந்து ஒரு பத்து, பதினைந்து தடவை இந்த வீடியோ பார்த்திட்டு இருக்கேன்...சிரிப்பு தாங்க முடியலை, நீங்களும் நல்ல சத்தம் வைத்து பாருங்கள்....தமிழ் சினிமாவில் mr.bean சம்பந்தபடுத்தி இருக்கும் ஒரு வீடியோ. (நன்றி யூடுப் ). ஏற்கனவே பார்த்த வீடியோவா இருந்தா.. ஒன்னி தப்பில்லை மறுபடியும் பாருங்க.




இவரும் டோனி ப்ளைரும் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்) ஒரே வகுப்பில் படித்தவர்களாம்.(கொசுறு செய்தி)

.

Friday, January 1, 2010

டபுள் போனஸ்

2009 வருடம் விறு விறுன்னு கடந்து போயிடுச்சுங்க, ஏதோ ஒரு பெரிய கினறு தாண்டின மாதிரி இருக்கு, வேற என்னங்க பண்றது இந்த பொருளாதார மந்த நிலைமை பிரச்சினை தான். புது வருடம் 2010 எல்லாருக்கும்,குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு சமாதானம், சந்தோஷம் நிறைந்த வருடமாக இருக்க வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்.  எனக்கு இருந்த ஒரு பெரிய கெட்ட பழக்கத்தை இந்த வருடம் விட்டரலாம்னு இருக்கேன், இணையத்தில் பதிவுகள் எழுதுவதை விட, பின்னுட்டம் எழுதுவது தான் எனக்கு பிடித்தம், ஆனால் பதிவுகள் எழுதும் போது வார்த்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவும், அடுத்தவர் பதிவில் பின்னுட்டம் எழுதும் போது சில சமயம் விடபடுகிறது, இதினால் சிலரை வெறுப்பு ஏத்தி விட்டதாக எனக்கு தோன்றிகிறது. சோ பின்னுட்டங்கள் ஒருவர் எழுதும் கருத்தை பற்றி மட்டுமே, தன்மையாக எழுத பழகவேண்டும்.

சென்ற வருடம் நிகழ்வுகளில் ரொம்ப நியாபகம் உள்ள விஷயம், பொது தேர்தல் முடிவுகள் தான். பா. ஜ .கா ஆட்சி அமையாதது முதல் சந்தோஷம்னா , கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் பங்கு இல்லாமல் போனது, டபுள் போனஸ் சந்தோசம்.

விளையாட்டு துறையில் ஆஸ்திரேலியா யாருடனாவது தோற்று போனால் சந்தோஷமா இருக்கும் , அதுவும் போன வருடம், ஏதோ சாம்பல் வச்சு தொடர் இருக்காமே? அதில் தோற்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இங்க்ளிஷ்காரன் பாண்டிங் முஞ்சில கரிய புசிடாங்க.

.

.

ஓகே வாசக்க்ஸ், இதுக்கு மேல சரியா எழுத வரமாட்டிக்குது அடுத்த பதிவில் சந்திக்கலாம்...பை பை....


.