Monday, December 21, 2009

பா.ஜ.க கட்சி தலைமை, குஜராத் சட்டம்.

பா.ஜ.க கட்சி தலைமை மாறிட்டு வருது, எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக பொது தேர்தல் முடிவு வெளி வந்தவுடன் பேப்பர்( ராஜினாமா) போட்டவர், இப்ப தான் ரீலீவ் ஆகிருக்கார்.  நமக்கு(சிறுபான்மையினர் ) சுத்தமா பிடிக்காத தலைவருங்க இவர், அதனால வெறும் நெகடிவ் தகவல் தாங்க.நல்ல விஷயம் தெரிந்தால் பின்னுட்டமாக எழுதுங்கள். வரவேற்கப்படும்.

கண்டகார், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு, அதில் பிணை கைதியானவர்களை, விடுவிக்க 3 தீவிரவாதிகளை விடுவிக்க பட்டார்கள். இந்த பிணை கைதிகள் மாற்றுதல் நடக்கும் பொது உள்துறை அமைச்சராக இருந்தவர்.
 
சரி, பயணிகள் உயிருக்காக செய்த ஒரு emotional முடிவு அப்படின்னு வச்சுகிட்டாலும், இவர் எழுதிய புத்தகத்தில் இந்த சம்பவம் பத்தி எழுதியது இவருடைய முழு அரசியல் நேர்மையும் கேள்வி குறியாக ஆக்கி விட்டது.அதாவது இந்த தீவரவாதிகள் விடுதலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை அப்படின்ற மாதிரி எழுதவும், நேர்காணல் கொடுக்கவும் செய்தார். இவர் ஏன் இப்படி செய்தார்?  பொது தேர்தல் சமயத்தில் மன்மோகன் சிங்'கை  இவர்கள் தாக்கிய ஒரே விஷயம் வீக் பிரதமர், அதனால் தன்னை பலசாலியாக காமிக்க தன்னுடைய பழைய காலத்து செயல்களை, தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றார்.
 
பாப்ரி மஸ்ஜித் சம்பவத்துக்கு இவர் நடத்திய ரத யாத்திரா, சங்க பரிவார்களை துண்டி விட்ட பெருமையும் இவரை தான் சேரும்.

ஜின்னாவை புகழ் பாடி தன்னுடைய பதவியை இழந்தவர். மன்னிக்கவும் RSS இனால் பதவி இறக்கம் செய்யப்பட்டவர்.

குஜராத் படுகொலை சம்பவத்தின் போதும் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர்.

ராஜ்நாத் சிங்கின் பதவி காலமும் முடிஞ்சிருச்சு, இப்ப புதுசா வந்திருக்கும் கட்சி தலைவர் யாருங்க....நிதின் கட்கரி 'வாம், RSS தெளிவா சொல்லிடைங்க, இந்த அருண் ஜெயிட்லி, சுஷ்மா ஸ்வராஜ், இவிங்களுக்கலாம் பதவி கிடையாதுன்னு,இப்போதைய பதவி 3 வருஷம் தான் செல்லும், அடுத்த 3 வருஷம் தான் முக்கியம், ஏன்ன அப்ப தான் பொது தேர்தல் வரும். நரேந்திர மோடி அதற்காக தன்னை தயார் படித்திட்டு வரார். தலைவர் குஜராத்ல புரட்சி பண்ணிட்டு இருக்கார், கட்டாயமா ஒட்டு போடுனுமால, அந்த ஊருல சட்டம் போட்டுட்டார். middle,upper வகுப்பில் இவருக்கு இருக்கும் ஆதரவை ஓட்டாக மாற்ற தான் இந்த சட்டம் என்று சொல்லிகிறார்கள்.

Monday, December 7, 2009

இலக்கணவாதி..

தமிழ் இலக்கணம் எல்லாரும் படித்து இருப்பீர்கள், தினம் தினம் பதிவுகளில் நிறைய கேள்விகள் அதற்கு ஏற்ற பதிலும் பலரும் பகிர்ந்து கொண்டு வரோம். சரி இப்ப நாம அளிக்கிற பதில், தமிழ் இலக்கணத்தில் அதற்கு என்ன பேர் சொல்றாங்க, அப்படின்னு பார்க்கலாம்.

சுட்டு விடை.
அங்க போ, இங்க போ அப்படின்னு சுட்டி காட்டுறது தாங்க சுட்டு விடை, வலையுலகத்தில் சொந்த கருத்து சொல்லாம, சுட்டி கொடுக்கிறது குட சுட்டு விடை அப்படின்னு சொல்லலாம்.

மறைவிடை.
கேட்ட கேள்விக்கு எதிர்மறையா சொல்றது தாங்க மறை விடை...எடுத்து காட்டு, இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா ? சுத்தமா பிடிக்கலை.

நேர் விடை.
ஒரு கேள்விக்கு உடன்பட்டு பதில் சொல்வது தாங்க நேர் விடை...எ.கா... நீ வலையுலகில் கட்டுரை காப்பி அடிச்சு பதிவு எழுதிருக்கியா ..? எழுதிருக்கேன்.

ஏவல் விடை.
நீ பதிவர் சந்திப்பு வருவியா அப்படின்னு கேட்டா ? நீங்க போயிட்டு வாங்க சார் அப்படின்னு கேள்வி கேட்டவனையே அதை செய்ய சொல்வது தாங்க ஏவல் விடை.

வினா எதிர் வினாதல் விடை.
நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களா அப்படின்னு கேட்டா ? முதல நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களானு எதிர் கேள்வி கேட்கறது தாங்க, வினா எதிர் வினாதல் விடை அப்படின்னு சொல்லுவாங்க.

உற்றது உரைத்தல் விடை.
நீங்க விஜய் படம் பார்த்தீங்களா ? அப்படின்னு கேட்டா, எனக்கு கழுத்தில் ப்ளட் வரும் என்று, இதற்கு முன்னாடி நடந்த சம்பவத்தை சொல்லுவது தாங்க, உற்றது உரைத்தல் விடை.

உறுவது கூறல் விடை.
சச்சின் விளையாட்டில் எப்ப ஒய்வு பெறுவார் ? அப்படின்னு கேட்டா. அவர் நிறைய ரெகார்ட் பண்றாரே அப்படின்னு, அதற்கு சம்பந்தமா நடக்க போறதை சொல்றது தாங்க உறுவது கூறல் விடை.

இனமொழி விடை
பதிவில் நல்ல கவிதை எழுத சொன்னா, அதற்கு பதிலா மொக்கை கதை எழுதுவது தாங்க இனமொழி விடை, (இங்கு கவிதைக்கு இனமானது கதை)

Tuesday, December 1, 2009

டம்மாரம் டனபாலு.

என்கணிதம் (numerology) படி ஆங்கிலத்தில் sivakasi என்ற பெயரை sivakaasi அப்படின்னு மாத்த சொல்லி, சிவகாசி நகராட்சிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நகரமன்றத்தில் ஒன்பது தி.மு.க வினரும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள். இது போன வாரம் வந்த செய்தி. சரி இதற்கு கலைஞர் ஒப்புதல் அளிப்பாரா ? கலைஞர் ஆதரவாளர்கள் சரியாக சொல்லுங்களேன் பார்க்கலாம். வெடிவிபத்து நிறைய நடைபெற்றால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு வசதி செய்யாம, பேர் மாற்றம் பன்னா சரியாயிடும் அப்படின்னு நினைக்கிற இவர்களை என்னனு சொல்றது.

------------------------------------------------------------------

ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபர் என்பது எல்லாருக்கும் தெரியும், இவருடைய பெயரை பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளின் சட்ட ஆவணங்களில் (certificate) அப்பாவாக எழுத சொல்லி இருக்கார். சுருக்கமாக பாகிஸ்தானில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளுக்கும் சர்தாரி தான் தந்தை அப்படின்னு சொல்லலாம். இதனால் அவர்களுக்கு என்ன பயன் அப்படின்னு ஆராய்ச்சி பன்ன வரலை. இது பாராட்ட வேண்டிய ஒரு செயல் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

------------------------------------------------------------------

விளையாட்டு துறையில், giant killer அப்படின்னு சொல்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க, இவிங்க நிறைய போட்டி ஜெயிக்க மாட்டாங்க, ஆனால் யாராவது ஜாம்பவான்களை மட்டும் எளிதா ஜெயிச்சுருவாங்க. டெல பொற்றோ(del potro), அப்படி தான் நினைக்கிறேன், இவர் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் back to back ஆட்டத்தில், நடால், பெடரர் ரெண்டு பேரையும் வீழ்த்திருகார்.

------------------------------------------------------------------

26/11 வீடியோ பார்க்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது, முக்கியமாக டிச்கோவேரி சேனலில் ஒரு வீடியோ பார்க்கும் போது, வெளிநாட்டு காரர்கள், அதிகம் பாராட்டியது அந்த ஹோட்டல் பணியாளர்களை. ஒரு பணியாளர் தன் உயிர் கொடுத்தாவது, அவர்களை காப்பாத்துவேன் என்று தைரியம் சொல்லி பிறகு இறந்தும் உள்ளார். ஹோட்டல் நல்ல பரிச்சியம் ஆன இவர்கள் எளிதாக அவர்களுக்கு தெரிந்த வழியில் தப்பித்து இருக்க முடியும், இருந்தாலும் பலர் இவர்களை காப்பாற்ற உயிர் விட்டு உள்ளார்கள். இதை கேட்ட பிறகு இந்த துறை சார்ந்தவர்கள் மேல் அதிகம் மரியாதை வந்துள்ளது.

Friday, November 20, 2009

தவறான ஒப்பீடுகள் ?

சச்சின் தேசியவாதி இல்லையாம்(அப்ப என்ன தீவிரவாதியா?),ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். ரொம்ப எளிதா இவிங்க இதில் சேர்க்காமல் விட்ட விஷயம், நண்டிக்ரம்,லால்கர்க்,சிங்கூர் இந்த இடங்களில் ஏழை மக்கள் ஒடுக்கப்பட்டு,கொல்ல பட்ட சம்பவத்தை,ஏன்னா இவிங்க கம்யூனிஸ்ட் போல இருக்கு,அந்த சம்பவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..சார் இப்படி சச்சின் நாட்டில் நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டா அவர் அரசியல்ல இருக்காருன்னு அர்த்தம்,இப்போதைக்கு அவர் BCCIல சம்பளம் வாங்கிட்டு இருக்கார்,அவர் பொது வாழ்கையில் இல்லை.அவர் BCCI contract நிறைய விஷயங்களை தடுக்கலாம்,அறிக்கைகளையும் சேர்த்து.இப்ப குட அவர் சொன்ன அறிகையை கவனமா படிச்சு பாருங்க.


மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மேல் சுத்தமா அக்கறை இல்லை அப்படின்னு இவர் சொல்றார், யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இவர் அதற்காக ஒப்பிட்ட நிகழ்ச்சியை பார்ப்போம், மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ? ..வேற ஒப்பிடே கிடைக்கலையா இவருக்கு. மலேசியாவில் போராட்டம் பண்ணவங்க எல்லாரும் மலேசியா குடிஉரிமை பெற்றவர்கள், போராட்டமே அங்கு சம உரிமை கேட்டு தான். இதையும் இந்திய குடிஉரிமை பெற்ற மாணவர்கள் அடித்த சம்பவத்தையும் எப்படி ஒப்பிடலாம், இப்பெல்லாம் வெளிநட்டு தமிழ் மக்களை அடித்தால், நெஞ்சம் பொறுக்குதில்லையே அப்படின்னு நாலு பதிவு எழுதிட்டு, டீ கடை பெஞ்சில் பத்து நிமிஷம் அதை பத்தி பேசிட்டு, நம்ம கடமை முடிஞ்சுதுடானு போயிட்டே இருக்காயங்க, சமீபத்தில் நடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு உதாரணம்.


மதங்கள் எதிரா விமர்சினம் பண்ணும் இவர், கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி என்ன சொல்றார், மத வல்லுனர்கள் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை ரொம்ப எளிதா கண்டுபிடிச்சு எழுதிருக்கார், நோவா ஆறு நாளில் கப்பல் கட்டினார் ..சார் கருத்தை ஆழமா சொல்ல முயற்சி பண்ணுங்க தப்பு இல்லை, அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. இதை விடுங்க இவர் அடுத்து கேட்ட கேள்வி...ஆப்ரிக்கா யானை, ஆசிய யானை இதில் எந்த யானை ஏறுச்சு ? டினோசார் ஏற்ற மாதிரி சொல்லவே இல்லையே ? பரபரப்பா கேள்வி கேட்டார். இந்த கேள்வி படிச்சா தூக்கி வாரி போட்டுது. ஏன்னா பொதுவா மத நம்பிக்கை இல்லாதவர்கள், அறிவியல் அதற்கு சொல்லும் காரணங்களை கேட்டு தான் விவாதிப்பார்கள். சார் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அண்டார்டிகா யானை அப்படின்னு ஒன்னு தோன்றலாம், அதற்கு அறிவியலில் evolution அப்படின்னு சொல்றாங்க. அப்ப டினோசர் ? அணைத்து வாழும் உயிரினங்கள் ஒவ்வொரு ஜோடியும் ஏற்ற பட்டதுன்னு இவரே சொல்றார்..100-120 வருடம் கட்டிய கப்பலில் அந்த டினோசர் ஏற்ற இடம் இருந்திருக்கும், எதற்கு இந்த கேள்வி ? சரி பதில் திருப்தி இல்லையா. உங்க வழியிலே வரேன், ஒவ்வொரு உயிரினமும் ஒரு குடும்பத்தை சேர்ந்தது, டினோசார், பள்ளி குடும்பம். சிறுத்தை பூனை குடும்பம், ஓநாய் நாய் குடும்பம்..சோ உங்க கணக்கு படி ஆறு நாள்(பொய்)கட்டிய கப்பலில் சின்ன பள்ளி ஏறி, அப்புறம் ஆயிரம் வருடம் கழித்து டினோசார் உருவாகி இருக்கலாம்(இங்க காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்கேன்...மொக்கையாகவும் தோன்றலாம்).அவர் நம்பிக்கை ஏற்ற பதில் என்று நினைகிறேன்.

Wednesday, November 11, 2009

என்னத்த பண்றது ? பயணம்.

மழை எவ்வளவு அடிச்சாலும் நாங்கலாம் வீட்ல உட்கார மாட்டோம்ணு சென்னை, கோவை, பொள்ளாச்சி பக்கம் கிளம்பினேங்க, ரயில் நிலையத்தில் நின்னா, நம்ம மக்கள்ஸ் தொலைபேசில அழைத்து சச்சின் ரெகார்ட் உடைக்க போறார் அப்படி இப்படின்னு பில்டப். இதுக்கு மேல என்னத்த சொல்ல ரயில் விட்டாலும் பரவா இல்லைன்னு, ரயில் நிலையத்தில் இருந்து வெளிய வந்து ஒரு நல்ல ஹோட்டல் கஷ்டபட்டு தேடி, உள்ள போனா, நாம போன நேரம் சச்சின் வெளிய போயிட்டு இருந்தார்.

சென்னை வந்து கொஞ்சம் வீடு வேலைகள் முடிக்கிற வரைக்கும் வானிலை மந்தமாக தான் இருந்தது, சென்னைல இருக்குற நம்ம பயலுங்க ஏதோ கல்லுரி பங்க் அடிக்கிற மாதிரி, ஆபீஸ் பங்க் பண்ணிட்டு வந்துடாய்ங்க, நாம மேல அவ்வளவு பாசம் பயலுங்களுக்கு(உண்மையில் சச்சின் ஆட்டம் இழந்த சோகத்தில் அடிச்ச தண்ணி, காலைல தெளியல அவிங்களுக்கு). சரி ப்ளூபெர்ரி அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு, சங்கம் திரைஅரங்கு பக்கத்தில் அங்க போய் நல்ல கட்டு கட்டிட்டு, கண்டேன் காதலை(சூப்பர் படம்) அப்படின்னு ஒரு படம் போனோம்.

படம் முடிஞ்சு வெளிய வந்தா பேய் மழை, அப்படியே கோயம்பேடு கிளம்பி போய், பொள்ளாச்சி ABT பஸ் ரொம்ப தாமதமா தான் வந்தது, என்னத்த பண்றது போங்க, காலைல பொள்ளாச்சி காந்தி சிலை முன்னாடி இருக்குற ஒரு ஹோடேலில் போய் சேர்ந்தோம், நல்ல ஊருங்க இது, ரெண்டாவது முறையா இங்க வரேன்.

என்னத்த பண்றது வால்பாறை, ஆழியார் அணை, மங்கி பால்ஸ், டாப் ஸ்லிப், பரம்பிகுளம் காடு, இப்படி பல பிளான் இருந்தாலும், ஹோட்டல், பஸ் டிக்கெட் இதெல்லாம் புக் பண்ணவன் கல்யாணமும் போனும்ல, அதனால கொஞ்சம் யோசிச்சு பார்த்து கிளம்புனா, சென்னைல எங்களை துரத்துன மழை, இங்கயும் விடலை, நாங்க பரவா இல்லை சரியா சில இடங்கள் பார்த்துட்டு விஷேசத்துக்கு வந்துடோம், இன்னொரு கும்பல் ரொம்ப கஷ்டப்பட்டு நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய் எங்களையும் கவலை படித்துடாங்க.

ஞாயிற்று கிழமை, மழை பயத்துல எங்கயும் போல(சுத்தமா மழை பெய்யல, என்னத்த பண்றது), நான் மட்டும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு திருசபைக்கு(சர்ச்) போய் வந்தேன். அப்புறம் மதியம் "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" 'காக்க காக்க' வில்லன் மாதிரி அப்படியே சுத்தி ரவுசு பண்ணிட்டு இருந்தோம். அப்பாலிக்க சாந்திரம், கோவை கிழம்பி வந்தா, என்னத்த சொல்ல, அன்னிக்கு முழுவதும் எங்களை விட்டு வைத்த மழை, கோவையில் எங்களுக்காக வெயிட் பன்னிருக்கு. அப்புறம் கோவையிலிருந்து ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு வந்து சேர்ந்தேன்.

எங்க ஊரு வைகை ஆற்றில் தண்ணி ஓடுதாம், பார்க்க ஆசையா தான் இருக்கு, என்னத்த பண்றது, மறுபடியும் கிறிஸ்துமஸ் அப்ப போறதா தான் ப்ளான்.

Thursday, November 5, 2009

பிடித்தது ? தமிழ் பிரதம மந்திரி.

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் :சிதம்பரம் - ஒரு தமிழரான இவர் என்னிக்காவது பிரதமர் ஆவார்னு ஒரு நப்பாசையும் இருக்கு.
பிடிக்காதவர்: வை.கோ - "தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் !!! "

2.எழுத்தாளர்

பிடித்தவர் : கருணாநிதி - இவருடைய எழுத்துக்கள் (மட்டும்) உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.
பிடிக்காதவர் : துக்ளக் சோ - ஒண்ணுமே புரியாது இவருடைய பத்திரிகை, வீட்டில் அப்பா வாங்கி வச்சு வெறுப்பு ஏத்துவார்.

3.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம் - இவர் படத்தில் நிறைய அரசியல் இருக்கும்.
பிடிக்காதவர்: சீமான் - இவர் படத்திற்கு வெளியே நிறைய அரசியல் பண்ணுவார்.


4.நடிகர்

பிடித்தவர் : சூர்யா - இவர் படம் திரையருங்கு போனா, உங்களை சுற்றி பிகர்ஸ் அமர்வது உறுதி. ...ஹீ.. ஹீ....சும்மாங்காட்டி சொன்னேன். உண்மையில் நல்ல நடிகர்.
பிடிக்காதவர் : விஜய் - இவரை சிலர் ரஜினி இணையாக பேசுகிறார்கள், அந்த காரணத்துக்காக... என்னிக்கும் தலைவர் ஒருவர் தானே ?

5 . இசையமைப்பாளர்

பிடித்தவர் : ஹாரிஸ் ஜெயராஜ்...நிறைய கிட்டார் ஒழி இருக்கும் (அமெரிக்காவில் இவர் அலுவலகம் வைக்காததும் ஒரு காரணம்)
பிடிக்காதவர் : தேவா ..இவரை சாப்ட்வேர் பசங்களுக்கு இணையா ஒருவர் எழுதிட்டார்..காப்பி பேஸ்ட் பண்ணி, எங்க மானத்தையும் வாங்குகிறார்.

6. விளையாட்டு வீரர்

பிடித்தவர் : முரளி விஜய், இவர் முதல் ஆட்டத்தில் முக்கியமான சமயத்தில் பன்ன ரன் அவுட் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கலாம்.
பிடிக்காதவர் : வி.ஆனந்த், இந்தியாவை விட ஸ்பெயின் இவருக்கு பிடித்திருக்கு, இவர் ஸ்பெயின் குடி பெயர்ந்து ரொம்ப வருஷங்கள் ஆயிடிச்சு.

7. பதிவர்

பிடித்தவர் : நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா மணி, பீர்
பிடிக்காதவர் : கோவி... எனக்கு பிடித்த எல்லாரையும் இவர் ரொம்பவே திட்டுவாருங்க....கிர்ர்ர்.
(குறிப்பு ... மணி,பீர், கோவி கவனிக்கவும், உங்களுக்காக முதல் விதிமுறை மீறி இருக்கேன்.விதிமுறை ஒன்றை படிக்கவும்)


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது

ஜெகதீஷ்
பிரபா
கனகு
தங்கராஜ்

விதிமுறை..

1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.

என்னை இந்த தொடருக்கு அழைத்த பீர் முகமத் அவர்களுக்கு நன்றி.

Tuesday, November 3, 2009

பத்திரிகை தர்மம்

பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு அரசியல், அரசியல் கட்சிகள் பற்றிய ஒரு அபிப்ராயம் எப்படிங்க வருது, தினசரி செய்தி தாள்கள் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும் தான், நீங்கள் அரசியல் விமர்சனம் வெறும் செய்தி தாள்களை பார்த்து மட்டும் பன்னுபவராக இருந்தால், நீங்கள் நல்லாவே ஏமாற்ற பட்டு இருக்கீர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சில முன்னணி செய்தி தாள்கள், 350-400 கோடி பணம் சம்பாதித்து இருக்கார்கள், பணம் குடுக்கும் வேட்பாளர்களை பற்றி நல்ல தலையங்கம், செய்திகள் அவர்கள் சார்பாக போட்டும் இருக்கார்கள், பணம் குடுக்க முடியாத வேட்பாளர்கள், செய்திகளில் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் இருக்கார்கள். இதெல்லாம் செய்திதாளில் வரும் விளம்பரம் பத்தி நான் சொல்லலைங்க, நாம நம்பி படிக்கும் செய்திகளில் இவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கு.

ஆனா ஊனா...பத்திரிகை சுதந்திரம், அப்படின்னு போராட்டம் பண்ணும் பத்திரிகைகள், முக்கியமான தேர்தல் சமயத்தில் ரொம்ப சுதந்திரமாவே பணத்தை வாங்கிட்டு, ஜனநாயகத்துக்கு துரோகம் பண்ணியும் இருக்கார்கள். பொதுவாக "அரசியல் தர்மம்", "கூட்டணி தர்மம்" அப்படின்னு சொல்லி அரசியல் கட்சிகளை கிழித்து எடுக்கும் இவர்கள்...."பத்திரிகை தர்மம்" என்பதை மறந்தது ஏனோ. இந்த ஒரு சம்பவத்தை வைத்து எல்லா பத்திரிகைகளையும் குறை சொல்லலைங்க, சில நிருபர்கள் உண்மையை மக்களுக்கும், உலகத்துக்கும் சொல்லணும் என்ற ஒரே காரணத்துக்காக உயிரையும் விட்டு இருக்கார்கள், இல்லைன்னு சொல்லலை.

சரி, இப்ப தமிழ் பத்திரிகைகளுக்கு இதில் சம்பந்தம் உண்டா ? எந்த அரசியல் கட்சி இதில் நிறைய செலவு செய்தார்கள், எந்த எந்த பத்திரிகைகள் பணம் வாங்கினார்கள், என்று இன்னும் சரியா தெரியலைங்க. தமிழ் செய்தி தாள்களில் இதை பற்றின செய்தி வந்துதான்னு கூட தெரியலை, இந்த விஷயத்தை expose பண்ணது ஹிந்து செய்தி தாள். பல வருஷங்களாக ஹிந்து மட்டுமே படித்து வருகிறேன், வலையுலகத்தில் தினமலர் செய்தி படித்தும் வந்தேன், நடிகை பிரச்சினைக்கு அப்புறம் தினமணியும் சேர்த்து படிப்பது உண்டு. ஹிந்து செய்தி படி இந்த சம்பவம் ஆந்த்ராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்ததாக எழுதி இருக்கார்கள். இதை பற்றி இன்னும் விவரம் தெரிந்தவர்கள் தகவல் பகரவும். ( நன்றி ஹிந்து)

ஓகே இப்ப நாம கேள்வி பகுதிக்கு செல்லுவோம்.
கடந்த முறை கேட்ட கேள்வியின் பதில் .....மாதவன் நாயர், முன்னாள் இஸ்ரோ தலைவர், தற்போதைய தலைவரும் ஒரு மலையாளி தான், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்த வார கேள்வி, இந்த படத்தில் இருப்பவர் யார்.



திருக்குறள் பகுதி

அப்பைக்கு அப்ப சும்மாங்காட்டி, ஒரு திருக்குறளும் எழுதலாம்னு இருக்கேன்.கூகிளில் "தர்மம் வெல்லும் + திருக்குறள்" அப்படின்னு போட்டு ஒரு தட்டு தட்டி  வந்த திருக்குறள்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்"

Tuesday, October 27, 2009

தனக்கு மிஞ்சியது...

இந்தியாவில் இருக்கும் பணக்கார வர்கங்களையும், தொழிலதிபர்களையும் , மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியர்கள் தானம், நிதி உதவி,சமுதாய அக்கறை,சமுதாய முன்னேற்றம். இந்த மாதிரி சமாசாரங்களில் இன்னும் நிறைய பண்ணலாம் அப்படின்ற ஒரு பொதுவான எண்ணம் இருக்காம். சமீபத்தில் சுனில் மிட்டல் நேர்காணல் ஒன்றில் இதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சொல்லும் காரணம்.

இந்தியர்கள் குடும்ப அமைப்பும்,கலாசாரமும் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் சொல்றாருங்க, அதாவது மேற்கத்திய நாடுகளில், பதினெட்டு வயசு ஆனவுடன் பையனயோ, மகளையோ வீட்ட விட்டே துரத்தி விடுவாங்களாம் (உண்மையாங்க ?). அதுக்கு மேல அவர்களை பத்திய ஒரு கவலை சுத்தமா இருக்காதாம். ஆனால் நம்முடைய நாட்டில் சாகும் வரை அப்பா அம்மா கூட தான் நிறைய பேர் இருக்க விரும்பறோம், நாலு, ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறோம்,அப்ப தான் கொஞ்சம் சந்தோசமா மூச்சை விட முடியுது.

"தனக்கு மிஞ்சியது தான் தானம்" அப்படின்னு சொல்றாங்க, இதில் தனக்கு என்பது, தான், தன்னுடைய மகன், பேரபிள்ளை, அம்மா,அப்பா...அப்படின்னு ஒரு பெரிய வட்டாரம் வந்திருதுங்க, இதனாலேயே. நமக்கு இந்த மாதிரி விஷயங்கள் அதிகம் செய்ய யோசிக்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒன்னு சொல்வாங்க 'charity starts at home' இது சொல்லப்பட்ட அர்த்தம் சரியாய் தெரியலை, ஆனால் நான் என்ன நினைக்கிறன் அப்படினா, நீங்கள் அநாதை இல்லம், முதியோர் இல்லம் அப்படின்னு தேடி பொய் உதவி பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்லைங்க, உங்கள் வீட்டில் சந்திக்கும் மக்களிடையே உதவி பண்ணலாம், உதாரணத்துக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைகாரர்கள்,காவலர்கள்,காய்கறி விற்பவர்கள் அவர்கள் மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு செலவு, இப்படி நாம தினம் தினம் சந்திக்கும் மக்களுக்கே உதவி பண்ண பழகலாம். சில விவசாய மக்களை பற்றி நான் கேள்வி பட்ட விஷயத்தயும் எழுதிடுறேன், அவர்கள் அறுவடை பண்ணும் போது, அந்த அறுவடை சிலவற்றை வேணும்னே விட்டு வைப்பாங்கலாம், ஏழை மக்கள்,கஷ்டபடுறவர்கள் எடுத்துகிரதுக்காக.

என்னங்க நிறைய அறிவுரை பண்றேனா, என்னங்க பண்றது நமக்கு ரொம்ப எளிதா வரது ரெண்டு விஷயம்ங்க, ஒன்னு கேள்வி கேட்கறது, இன்னொன்னு அறிவுரை பண்றது,

சரி முடிக்கிறதுகு முன்னாடி இன்னும் ரெண்டு விஷயம் சொல்லிடுறேன்.

"வலது கையில் பண்றது இடது கைக்கே தெரிய கூடாது"
இதன் அர்த்தம், நாம பண்ணும் இந்த மாதிரி உதவிகள், விளம்பரத்துகாகவோ, விளம்பரப்டுத்தவோ கூடாது.
"ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்"
இந்த ரெண்டு வாக்கியங்களும் பைபிளில் வரும் முக்கியமான வசனம்ங்க.

Tuesday, October 20, 2009

தேசத்திற்காக உயிர்கொடுப்போம்.

நமக்கு எப்போதுமே புது படம் பார்த்துட்டு வந்து, அதை பார்க்கிறதுக்கு பயங்கர ஆர்வமா இருக்கரவன்ட போய் படத்துல வர சஸ்பென்ஸ் எல்லாத்தையும் சொல்லி, அவிங்கள படம் பார்க்கும் போது வரும் ஆர்வத்தை குறைக்கிறது தாங்க வேலை.

சரிங்க இந்த தீபாவளி ரிலீஸ் ரொம்ப எதிர்பார்க்க பட்ட படம் ஆதவன் அதை பத்தி சுத்தமா எழுத விருப்பம் இல்லை, ஏன்னா படம் அந்த மாதிரி. முழுக்க முழுக்க சூர்யா கூடவே வடிவேலுவும் வரார், இது ஒரு ஆக்க்ஷன் படமா, சஸ்பென்ஸ் படமா, இல்லை காமெடி படமானு கடைசி வரைக்கும் புரியவே இல்லை. சூர்யா, பத்து வயசு சிறுவனா ஒரு அஞ்சு நிமிஷம் வருவார், அந்த காட்சி எடுத்தவனை ஒரு தடவை பாராடிட்டு, இதுக்கு மேல இந்த மாதிரி முயற்சி எல்லாம் பண்ண வேணாம்னு கை எடுத்து கும்பிடலாம்.

சரிங்க, 'ஆதவன்' பார்த்த பாதிப்போ என்னமோ தெரியலைங்க "பேராண்மை" படம் ஒரு அளவுக்கு நல்லாவே இருந்தது பார்க்க, தேசபற்றை மையமா வச்சும், மலை வாசிகளை வைத்தும் படம் எடுத்திருகார்கள். படம் பார்க்கும் போதே NSS மேல நிறைய மதிப்பு வருது, இந்த படத்தில் முதல் பாதி, நிறைய இடத்தில் கட், மலை ஆதிவாசிகளை பற்றி தப்பானா வசனங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் பாட்டு ஒன்னும் நல்லா இல்லைங்க, நிறைய பாட்டும் வந்த மாதிரி தெரியலை. ஐந்து அம்மணிகள் வராங்க, ஒரு இடத்தில் தேசத்துக்காக உயிர் கொடுப்போம்னு துப்பாக்கிய தூக்கி உறுதிமொழி எடுப்பாங்க, நல்ல காட்சிங்க அது.

Friday, October 16, 2009

பிரபல மன்னிப்புகள்

உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தை பல கசப்பான சம்பவங்களை மறக்க வைக்க கூடிய  ஓர் வார்த்தை என்றே நினைக்கிறன்.இந்த வாரம் எனக்கு பிடித்த, பிடிக்காத, எதிர்பார்த்த மன்னிப்புகளை பற்றி பாப்போம்.

பிடித்த மன்னிப்புகள்.

காங்கிரஸ் பாப்ரி மஸ்ஜித் சம்பவத்திற்காக முஸ்லிம்களிடம் கேட்ட மன்னிப்பு (வோட்டு).
கெவின் ரட், ஆஸ்திரேலியா பிரதமர், அபோரிஜின் இனத்தாரிடம் கேட்ட.
திருமதி ஸ்டைன்ஸ், தன குழந்தை, கணவர் கொன்றவர்களை மன்னித்தது(ஒரிசா).

அமிதாப் பச்சன், கரன் ஜோகர், ராஜ் தாக்ரேவிடம் விடம் கேட்ட.
ரஜினி டாக்டர் ராமதாஸ்விடம் கேட்ட.
நோபெல் வெங்கி, இந்தியர்களிடம் கேட்ட.
சோனியா காந்தி, நளினியை மன்னித்தது.

பிடிக்காத மன்னிப்பு.

ரஜினி கன்னடிகர்கள்  கிட்ட கேட்ட,
குஷ்பு அழுகையுடன் கேட்ட.

கேட்கபடாத மன்னிப்புகள்.

நரேந்திர மோடி, குஜராத் முஸ்லிம்களிடம்.
இங்கிலாந்து அரசி, ஜாலியன் வாலா பாக் சென்ற போது. கேட்கபடாத.
சாம் ஆன்டேர்சன் படம் பார்க்க வைத்த ரெண்டு நண்பர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும்


கேள்வி பகுதி

சென்ற வார பதில் உதம் சிங், ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்த்திய மேஜர் டயரை கொன்றவர்.

இவர் யாருங்க ? ஒரு மொக்கை க்லு அடிகடி டீ கடை போறவங்களுக்கு நியாபகம் வரலாம்.


Friday, October 9, 2009

டவுட் டனபாலு, கிச்சடி.

எந்த செய்தியானாலும் படம் புடிச்சு போடும் தினமலர் , எடிட்டர் கைது செய்ததை படம் பிடிக்காம ஏன் விட்டார்கள், இத்தனைக்கும் அவர்கள் அலுவலத்தில் தான் நடந்துருக்கு, அத்து மீறி போலீஸ் நுழைந்தார்கள், வார்ரன்ட் இல்லாம வந்தார்கள் அப்படின்னு செய்தியை மட்டும் போடறாங்க. நம்ம சாணக்கிய முதல்வரை "அம்மா" கைது பண்ணும் பொது அவர்களை சேர்ந்தோர் எப்படி படம் பிடித்து காமிச்சாங்க. அப்படில இருக்கனும். என்னப்பா லெனின் நடிகை படம் போட தெரிந்த உங்களுக்கு, உங்கள் கைது படம் எடுக்க முடியாமல் போன காரணம் தான் என்ன?

மூடப்பட்டுள்ள "ஸ்பிக்' ஆலையை ஒரு மாதத்தில் திறக்க நடவடிக்கை --தினமணி (ஆமாங்க இப்பலாம் தினமலர் படிக்கிரதில்லை ) . இது நடப்பதற்கு எங்க ஊரு அமைச்சருக்கு முக்கிய பங்காம், இந்த விஷயத்தில் எந்த கேள்வியும் இல்லை, ஏன்னா அவர் எங்க ஊருகாரர்.

ஹிட்லர் மண்டை ஓடுன்னு சொல்லி ரஷ்யாவில் வைத்திருகிறார்கள், இதை ஆராய்ச்சி செய்த அமெரிக்கர்கள், ஒரு ஆணின் மண்டை ஒடுகான கணம் இல்லையாம் அதில், அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம்னு சொல்றாங்க. உண்மையிலே அது அவர் மண்டை ஓடா இருந்தா ஹிட்லர் தலைகணம், திமிரு இல்லாத ஒரு கொடுங்கோல் அதிபரா இருப்பாரோ ?

வாரா வாரம் என்னுடைய பதிவில் ஒரு பொது அறிவு கேள்வி கேட்கலாம்னு இருக்கேன். வருட முடிவில் நிறைய பதில் சொன்னவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்.
இந்த படத்தில் இருக்கும் இந்தியர் யார், இவருக்கும் சுதந்திர போராட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கு
உன்டு. என்னுடைய ஆங்கில பதிவில் இந்த கேள்வி கேட்டு யாரும் பதில் சொல்ல வில்லை, நீங்கள் முயற்சித்து பாருங்கள்.



Wednesday, October 7, 2009

இயற்கை

சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ச்ச நாம சும்மா போட்டோ எடுத்ததோடு நிக்காம, நிலவில் தண்ணி இருக்குன்னும் கண்டுபிடிச்சு உலகத்துக்கு சொன்னோம். எனக்கு என்னமோ இந்த தண்ணீர் கண்டுபிடிப்பில் இயற்கை அன்னை ரொம்பவே கோபம் ஆகிடாங்கனு நினைகிறேன்.

இது வரைக்கும் வறட்சி நிதி கேட்டுட்டு இருந்த மாநிலங்கள் இப்ப வெள்ளம் நிதி கேட்கும் அளவுக்கு மோசமாக இருக்கு. ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் ரொம்பவே கஷ்ட நிலைமையில் இருக்குங்க. உள்துறை அமைச்சர் அரசு நிதி குடுப்பதில் பற்றாக்குறையே இருக்காது அப்படின்னு சொல்றார், என்னுடைய பிராத்தினை இந்த நிதி உதவிகள் கஷ்டப்படற மக்களை சரியாக சென்றடயனும். வறட்சி சமயத்தில் மக்கள் அவுங்க தங்கறதுக்கு வீடும், அவுங்க உடமையும் இருந்தது. இப்ப வெள்ளத்துக்கு அப்புறம் வீடு, உடமை இழந்து நிறைய பேர் நிக்குறாங்க.

தேக்கடில நடந்த விபத்தை நினைத்தா இன்னும் கஷ்டமா இருக்குங்க, அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சுத்தமா நீச்சலே தெரியாத நாம, கேரளாவில் ஒரு சுற்றுலா தளத்தில், அதிக கூட்டமுடன் ஒரு படகில் நண்பர்களுடம் கேலியும் குத்துமாக சென்று வந்தேன். இனிமேலாவது படகு சவாரி பண்ணும் முன்பு 'உயிர் காப்பு அங்கி' மற்ற பாதுகாப்பு வசதி இருக்கானு பாத்திட்டு தான் சவாரி செல்லனுங்க

பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு தாங்க சமோவா தீவு, சென்ற வாரத்தில் சுனாமி இந்த தீவை தாக்கி இருக்கு , சுனாமி எச்சரிக்கை சரியான சமயத்தில் வந்ததாலும், கடல் உள்வாங்கியதை பார்த்தும் மக்கள் கொஞ்சம் உஷாராய் இருந்திருக்காங்க, இருந்தாலும் அடிச்ச சுனாமி சுமார் நுறு உயிருக்கும் மேல எடுத்துட்டு , அந்த தீவை ஒரு துவசம் பண்ணிட்டு போயிருச்சுங்க.

இன்னொரு இயற்கை அழிவும் நடந்துறுக்கு சென்ற வாரத்தில், இந்தோனேசியா நில நடுக்கம் ஆயிரகணக்கான மக்கள் புதைக்க பட்டு இறந்துடாங்க. ஒரு வாரத்தில் இவளவு சம்பவங்களா ? எனக்கு தான் இப்படி தெரியுதா இல்லை உலகத்தில் ரொம்ப சாதரணாம இந்த மாதிரி வார வாரம் நடந்துட்டு தான் இருக்கா ?

Monday, October 5, 2009

இன்றைய அரசியல்

ஜார்ஜ் பிர்ணண்டேஸ், இவர் தன்னுடைய உடை அவரே தான் அயர்ன் பண்ணுவாராம், அமைச்சர இருந்த போதும் கூட அவர் சொந்த வாகனத்தில், தானே ஓட்டிட்டு தான் வருவார் அலுவகத்துக்கு. கார்கில் போரின்போது பாதுகாப்பு அமைச்சரா இருந்தவரும் இவரே.

மம்தா பநேர்ஜீ , ஒரு தூக்கு பையோட தான் பார்பீர்கள் இவரை, அமைச்சரா இருந்தாலும் சாதரண வகுப்பில் தான் பயணம் செய்வார், பொது தேர்தல் சமயத்தில் TATA நிறுவனம் பல கோடி அவருடைய கட்சிக்காக நிதி தந்தது, அதை நிராகரித்தவர். சிங்குரில் இருந்து TATA வை விரட்டி அடிதாவரும் இவரே.

சிதம்பரம், உள்துறை அமைச்சர், இவர் உயிருக்கு ஆபத்து என்றாலும், பெரும்பாலும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் எல்லா இடத்துக்கும் செல்பவர், அவருடைய பாதுகாப்பு அரசுக்கு வெட்டி செலவு என்று நினைப்பவர்.

எதுக்காக வெவ்வேறு கட்சியில் இருக்கும் இவர்களை பத்தி எழுதினேன்? விஷயம் இருக்குங்க நம்முடைய நாட்டில் அரசியல்வாதி அப்படின்னு சொன்னாலே மோசடி பண்றவன், ஊழல் பண்றவன், இப்படி தாங்க நினைப்போம். இன்னும் நமக்கு தெரியாத பல பேர் இருகாங்க அரசியலில், இவர்களை விட யோக்கியமா, நேர்மையா வாழறவங்க. சமீபத்தில் உத்திரப்ரதேசம் மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் எல்லா காங்கிரஸ் mla,mp கல், தலித் வீட்டில் ஒரு நாள் இருந்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர்கள் பலர், "பாருடா எவ்ளோ விளம்பரம் பண்றாங்க பாருங்க, இவிங்க ஒரு நாள் போறதால அவிங்களுக்கு என்ன ப்ருயோஜனம், இது சுத்த ஏமாற்றுத்தனம்" அப்படின்னு சொன்னாங்க, நம்ம ஊடகங்களும் இதே பாணியில் செய்திகளை போட்டு காமிச்சாங்க.

சாதரணமா தேர்தல் சமயத்தில் வீட்டுக்கு போகும் அரசியல்வாதிகளை, அஞ்சு வருஷமா இந்த பக்கம் வரலை, ஒட்டு கேட்கும் போது மட்டும் வரான் அப்படின்னு சொல்லுவோம். இப்ப தேர்தல் இல்லாத சமயத்தில் வந்தாலும் பிரச்சினை. வராம இருந்தாலும் பிரச்சினை, ஏழைகள் கஷ்டம் இவனுக்கு எப்படி தெரியும்? அப்படின்னு ஒரு கேள்வி கேட்போம். இதே சம்பவத்தை மக்களும், செய்தி தாள்களும் கொஞ்சம் ஊக்குவிக்கும் வகையாக சொல்லிருந்த, உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பல மாநிலங்களிலும் நடந்துராதா? ஏழைகள் கஷ்டம் கொஞ்சமாவது தீராதா? எனக்கு தெரிஞ்சு கொஞ்சமாவது தீரும், கண்டிப்பா.

அறுபது வருட இந்தியாவில், இந்த அரசியல்வாதிகளால் தான் நாடு முன்னேறவே இல்லை அப்படினும் ஒரு சாரார் புலம்புவார்கள், இப்படி சொல்லும் போதெல்லாம் எனக்கு அமெரிக்க ஜனாதிபதி சொன்ன வாக்கியம் தாங்க நினைவுக்கு வரும் "Ask not what the country did for you, ask what you did for the country". அதாவது "உங்கள் நாடு உங்களுக்கு என்ன பண்ணது அப்படின்னு கேட்காதீர்கள், நீங்கள் நாட்டுக்காக என்ன பண்ணீர்கள் என்று கேட்டு பாருங்கள்" என்று சொன்னார். எவ்ளோ பேருங்க ஒழுங்கா வரி கட்டுறோம், ஒழுங்கா நிலம்,வீடு சரியான விலைக்கு பதிவு பண்றோம், எவ்ளோ பேரு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குறோம், லஞ்சம் வாங்கி வேலை பண்றோம், எவ்ளோ பேரு ஒழுங்கா ஒட்டு போடுறோம் தேர்தலில், இந்த மாதிரி பிரச்சினை நம்மிடம் நிறைய இருக்கு.

மேல சொன்ன அமைச்சர்கள், இவர்கள் மேலயும் ஊழல் குற்றசாட்டுகள் இருக்கு இல்லைன்னு சொல்லலை, யோசிச்சு பாருங்க சத்யம் முதலாளி ராமலிங்க ராஜு, 7000 கோடி ஊழல், நாஸ்காம் கடந்த அதிபர் கிரண் கிராம்னிக், வருமான வரி ஊழளில் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கார், இன்னும் நிறைய தகவல்தொழில்நுட்பதுரை "சான்றோர்களும்" ஊழல் பண்ணிட்டு தானே இருகாங்க . அதுக்காக தகவல் தொழில்நுட்பத்துறை இருப்பவர்கள் எல்லாரும் ஊழல்வாதிகள் அப்படின்னு சொல்லிடலாமா. நானும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தான் இருக்கேன், எனக்கு தெரியும் எப்படி எப்படிலாம் கிளயன்ட் எமாத்துகிறார்கள் என்று.

அரசியல்வாதிகள் ஊழல் பன்றவர்களாக இருந்தாலும், அவர்கள் பண்ணும் சில நல்ல விஷயங்களை நாம பாராட்டி தான் ஆகணும், அப்ப தான் அந்த விஷயம் மற்ற எடத்துக்கும் பரவும், மக்களை சென்றடையும். அது எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு சமயம் தான் நடக்கும் எப்பனா, அந்த ஆளு சட்டுன்னு செத்தா, சமீபத்தில் Y.S.R புகழாதவர்களே கிடையாது.

அரசியலில் பிடிக்காத காரியம் இருக்குங்க, அதாவது பிரிவினை அரசியல் ஆங்கிலத்தில் divisive politics அப்படின்னு சொல்லலாம், உதரணத்துக்கு, RSS, நரேந்திர மோடி, வருன் காந்தி, இவர்களை போன்றோர் ஒரு சமுகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிரா தூண்டி விட்டு, அதன் மூலம் அரசியலில் பெரிய ஆளாக நினைப்பது. இது ரொம்பவே ஆபத்தான ஒரு அரசியலுங்க, பல பேரை பலிகொண்ட ஒரு அரசியலும் கூட.

சரிங்க நிறைய எழுதிட்டேனு நினைகிறேன், இதுவரைக்கும் படித்து இருந்தால் மிக்க நன்றி, உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதலாம்

Sunday, October 4, 2009

கொத்து பரோட்டா

நான் இந்த பதிவுக்கு ஏன் இந்த பேர் வச்சேன் என்று யாராவது கேட்கலாம், அட அப்படி யாரும் கேட்கலைனாலும் நானே சொல்லுவேங்க.

வாரத்துக்கு ஒரு தடவையாவது நான் பெரும்பாலும் கொத்து பரோட்டா சாபிடுவது வழக்கம். அதே வழக்கத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது தமிழில் பதிவு எழுதுவேன் ஒரு நம்பிக்கை, அதாங்க இந்த பேர். எப்படிங்க லாஜிக் நல்லா இருக்கா ?.

சரி எதுக்கு மதுரை திருச்சின்னு ஊரு பேருலாம் லிங்க்ல வச்சிக்கிட்டு ? பிறந்தது திருச்சிங்க, ஆனால் வளர்ந்தது தமிழை சங்கம் வைத்து வளர்த்த ஊருங்க, ஆமாங்க மதுரை. மதுரைல கூடல்நகர் அப்படின்ற பகுதி, வைகை ஆற்றங்கரைலிருந்து ஒரு நான்கு அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி. அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, மதுரை கொத்து பரோட்டா க்கு ரொம்ப பிரபலம்.

சரி விஷயத்துக்கு வருவோம், நமக்கு பல துறைல பயங்கர ஆர்வ கோளாறு. அதனால பெரும்பாலும் இந்த பதிவு விளையாட்டு, அரசியல், சினிமா, மருத்துவம், வியாபாரம், என்னுடைய அனுபவம், இதை பற்றி இருக்கும்.