Monday, October 5, 2009

இன்றைய அரசியல்

ஜார்ஜ் பிர்ணண்டேஸ், இவர் தன்னுடைய உடை அவரே தான் அயர்ன் பண்ணுவாராம், அமைச்சர இருந்த போதும் கூட அவர் சொந்த வாகனத்தில், தானே ஓட்டிட்டு தான் வருவார் அலுவகத்துக்கு. கார்கில் போரின்போது பாதுகாப்பு அமைச்சரா இருந்தவரும் இவரே.

மம்தா பநேர்ஜீ , ஒரு தூக்கு பையோட தான் பார்பீர்கள் இவரை, அமைச்சரா இருந்தாலும் சாதரண வகுப்பில் தான் பயணம் செய்வார், பொது தேர்தல் சமயத்தில் TATA நிறுவனம் பல கோடி அவருடைய கட்சிக்காக நிதி தந்தது, அதை நிராகரித்தவர். சிங்குரில் இருந்து TATA வை விரட்டி அடிதாவரும் இவரே.

சிதம்பரம், உள்துறை அமைச்சர், இவர் உயிருக்கு ஆபத்து என்றாலும், பெரும்பாலும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் எல்லா இடத்துக்கும் செல்பவர், அவருடைய பாதுகாப்பு அரசுக்கு வெட்டி செலவு என்று நினைப்பவர்.

எதுக்காக வெவ்வேறு கட்சியில் இருக்கும் இவர்களை பத்தி எழுதினேன்? விஷயம் இருக்குங்க நம்முடைய நாட்டில் அரசியல்வாதி அப்படின்னு சொன்னாலே மோசடி பண்றவன், ஊழல் பண்றவன், இப்படி தாங்க நினைப்போம். இன்னும் நமக்கு தெரியாத பல பேர் இருகாங்க அரசியலில், இவர்களை விட யோக்கியமா, நேர்மையா வாழறவங்க. சமீபத்தில் உத்திரப்ரதேசம் மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் எல்லா காங்கிரஸ் mla,mp கல், தலித் வீட்டில் ஒரு நாள் இருந்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர்கள் பலர், "பாருடா எவ்ளோ விளம்பரம் பண்றாங்க பாருங்க, இவிங்க ஒரு நாள் போறதால அவிங்களுக்கு என்ன ப்ருயோஜனம், இது சுத்த ஏமாற்றுத்தனம்" அப்படின்னு சொன்னாங்க, நம்ம ஊடகங்களும் இதே பாணியில் செய்திகளை போட்டு காமிச்சாங்க.

சாதரணமா தேர்தல் சமயத்தில் வீட்டுக்கு போகும் அரசியல்வாதிகளை, அஞ்சு வருஷமா இந்த பக்கம் வரலை, ஒட்டு கேட்கும் போது மட்டும் வரான் அப்படின்னு சொல்லுவோம். இப்ப தேர்தல் இல்லாத சமயத்தில் வந்தாலும் பிரச்சினை. வராம இருந்தாலும் பிரச்சினை, ஏழைகள் கஷ்டம் இவனுக்கு எப்படி தெரியும்? அப்படின்னு ஒரு கேள்வி கேட்போம். இதே சம்பவத்தை மக்களும், செய்தி தாள்களும் கொஞ்சம் ஊக்குவிக்கும் வகையாக சொல்லிருந்த, உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பல மாநிலங்களிலும் நடந்துராதா? ஏழைகள் கஷ்டம் கொஞ்சமாவது தீராதா? எனக்கு தெரிஞ்சு கொஞ்சமாவது தீரும், கண்டிப்பா.

அறுபது வருட இந்தியாவில், இந்த அரசியல்வாதிகளால் தான் நாடு முன்னேறவே இல்லை அப்படினும் ஒரு சாரார் புலம்புவார்கள், இப்படி சொல்லும் போதெல்லாம் எனக்கு அமெரிக்க ஜனாதிபதி சொன்ன வாக்கியம் தாங்க நினைவுக்கு வரும் "Ask not what the country did for you, ask what you did for the country". அதாவது "உங்கள் நாடு உங்களுக்கு என்ன பண்ணது அப்படின்னு கேட்காதீர்கள், நீங்கள் நாட்டுக்காக என்ன பண்ணீர்கள் என்று கேட்டு பாருங்கள்" என்று சொன்னார். எவ்ளோ பேருங்க ஒழுங்கா வரி கட்டுறோம், ஒழுங்கா நிலம்,வீடு சரியான விலைக்கு பதிவு பண்றோம், எவ்ளோ பேரு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குறோம், லஞ்சம் வாங்கி வேலை பண்றோம், எவ்ளோ பேரு ஒழுங்கா ஒட்டு போடுறோம் தேர்தலில், இந்த மாதிரி பிரச்சினை நம்மிடம் நிறைய இருக்கு.

மேல சொன்ன அமைச்சர்கள், இவர்கள் மேலயும் ஊழல் குற்றசாட்டுகள் இருக்கு இல்லைன்னு சொல்லலை, யோசிச்சு பாருங்க சத்யம் முதலாளி ராமலிங்க ராஜு, 7000 கோடி ஊழல், நாஸ்காம் கடந்த அதிபர் கிரண் கிராம்னிக், வருமான வரி ஊழளில் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கார், இன்னும் நிறைய தகவல்தொழில்நுட்பதுரை "சான்றோர்களும்" ஊழல் பண்ணிட்டு தானே இருகாங்க . அதுக்காக தகவல் தொழில்நுட்பத்துறை இருப்பவர்கள் எல்லாரும் ஊழல்வாதிகள் அப்படின்னு சொல்லிடலாமா. நானும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தான் இருக்கேன், எனக்கு தெரியும் எப்படி எப்படிலாம் கிளயன்ட் எமாத்துகிறார்கள் என்று.

அரசியல்வாதிகள் ஊழல் பன்றவர்களாக இருந்தாலும், அவர்கள் பண்ணும் சில நல்ல விஷயங்களை நாம பாராட்டி தான் ஆகணும், அப்ப தான் அந்த விஷயம் மற்ற எடத்துக்கும் பரவும், மக்களை சென்றடையும். அது எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு சமயம் தான் நடக்கும் எப்பனா, அந்த ஆளு சட்டுன்னு செத்தா, சமீபத்தில் Y.S.R புகழாதவர்களே கிடையாது.

அரசியலில் பிடிக்காத காரியம் இருக்குங்க, அதாவது பிரிவினை அரசியல் ஆங்கிலத்தில் divisive politics அப்படின்னு சொல்லலாம், உதரணத்துக்கு, RSS, நரேந்திர மோடி, வருன் காந்தி, இவர்களை போன்றோர் ஒரு சமுகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிரா தூண்டி விட்டு, அதன் மூலம் அரசியலில் பெரிய ஆளாக நினைப்பது. இது ரொம்பவே ஆபத்தான ஒரு அரசியலுங்க, பல பேரை பலிகொண்ட ஒரு அரசியலும் கூட.

சரிங்க நிறைய எழுதிட்டேனு நினைகிறேன், இதுவரைக்கும் படித்து இருந்தால் மிக்க நன்றி, உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதலாம்

2 comments:

Sanjai Gandhi said...

வெரி குட்.. ஆனா இவ்ளோ எழுத்துப் பிழைகள் ஆகாது :)

பின்னூட்டம் எல்லாம் தெளிவா இருக்கு. இங்கு மட்டும் பிழைகளா? :)

வாழ்த்துகள்.. மேலும் எழுதுங்க..

Samuel | சாமுவேல் said...

சஞ்சய்...
என்ன பாஸ், இப்படி சொல்லிடீங்க, நமக்கு அடுத்தவனை வெறுப்பு எத்துரதுனா சரியா எழுத வருது..நாமலே ஒன்னு எழுதனும்னா எழுத்துப் பிழைகள் வருது.

வருகைக்கு நன்றி.