Monday, December 21, 2009

பா.ஜ.க கட்சி தலைமை, குஜராத் சட்டம்.

பா.ஜ.க கட்சி தலைமை மாறிட்டு வருது, எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக பொது தேர்தல் முடிவு வெளி வந்தவுடன் பேப்பர்( ராஜினாமா) போட்டவர், இப்ப தான் ரீலீவ் ஆகிருக்கார்.  நமக்கு(சிறுபான்மையினர் ) சுத்தமா பிடிக்காத தலைவருங்க இவர், அதனால வெறும் நெகடிவ் தகவல் தாங்க.நல்ல விஷயம் தெரிந்தால் பின்னுட்டமாக எழுதுங்கள். வரவேற்கப்படும்.

கண்டகார், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு, அதில் பிணை கைதியானவர்களை, விடுவிக்க 3 தீவிரவாதிகளை விடுவிக்க பட்டார்கள். இந்த பிணை கைதிகள் மாற்றுதல் நடக்கும் பொது உள்துறை அமைச்சராக இருந்தவர்.
 
சரி, பயணிகள் உயிருக்காக செய்த ஒரு emotional முடிவு அப்படின்னு வச்சுகிட்டாலும், இவர் எழுதிய புத்தகத்தில் இந்த சம்பவம் பத்தி எழுதியது இவருடைய முழு அரசியல் நேர்மையும் கேள்வி குறியாக ஆக்கி விட்டது.அதாவது இந்த தீவரவாதிகள் விடுதலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை அப்படின்ற மாதிரி எழுதவும், நேர்காணல் கொடுக்கவும் செய்தார். இவர் ஏன் இப்படி செய்தார்?  பொது தேர்தல் சமயத்தில் மன்மோகன் சிங்'கை  இவர்கள் தாக்கிய ஒரே விஷயம் வீக் பிரதமர், அதனால் தன்னை பலசாலியாக காமிக்க தன்னுடைய பழைய காலத்து செயல்களை, தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றார்.
 
பாப்ரி மஸ்ஜித் சம்பவத்துக்கு இவர் நடத்திய ரத யாத்திரா, சங்க பரிவார்களை துண்டி விட்ட பெருமையும் இவரை தான் சேரும்.

ஜின்னாவை புகழ் பாடி தன்னுடைய பதவியை இழந்தவர். மன்னிக்கவும் RSS இனால் பதவி இறக்கம் செய்யப்பட்டவர்.

குஜராத் படுகொலை சம்பவத்தின் போதும் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர்.

ராஜ்நாத் சிங்கின் பதவி காலமும் முடிஞ்சிருச்சு, இப்ப புதுசா வந்திருக்கும் கட்சி தலைவர் யாருங்க....நிதின் கட்கரி 'வாம், RSS தெளிவா சொல்லிடைங்க, இந்த அருண் ஜெயிட்லி, சுஷ்மா ஸ்வராஜ், இவிங்களுக்கலாம் பதவி கிடையாதுன்னு,இப்போதைய பதவி 3 வருஷம் தான் செல்லும், அடுத்த 3 வருஷம் தான் முக்கியம், ஏன்ன அப்ப தான் பொது தேர்தல் வரும். நரேந்திர மோடி அதற்காக தன்னை தயார் படித்திட்டு வரார். தலைவர் குஜராத்ல புரட்சி பண்ணிட்டு இருக்கார், கட்டாயமா ஒட்டு போடுனுமால, அந்த ஊருல சட்டம் போட்டுட்டார். middle,upper வகுப்பில் இவருக்கு இருக்கும் ஆதரவை ஓட்டாக மாற்ற தான் இந்த சட்டம் என்று சொல்லிகிறார்கள்.

5 comments:

பீர் | Peer said...

நல்ல விஷயங்களை மடலில் பெறுவதற்காக :)

மணிகண்டன் said...

&&&
middle,upper வகுப்பில் இவருக்கு இருக்கும் ஆதரவை ஓட்டாக மாற்ற தான் இந்த சட்டம் என்று சொல்லிகிறார்கள்
&&&

Is the legislation passed asks everyone to vote or forces just the legislators to vote ?

And whatever be the reason, i would not really be against it but the only issue in indian democracy is that they don't discuss/debate wholly before passing the legislations.

Being Young, i suppose rajiv did something similar to gain the votes of younger indians by changing the voting age from 21 to 18. That worked out pretty good !

மணிகண்டன் said...

யாராவது உங்களை திட்டி எல்லாம் கமெண்ட் போட்டாங்களா, கமெண்ட் moderation வச்சி இருக்கீங்க ?

Samuel | சாமுவேல் said...

//Is the legislation passed asks everyone to vote or forces just the legislators to vote ?
//

yes everyone. as of now the bill was passed for local body elections only.

//Being Young, i suppose rajiv did something similar to gain the votes of younger indians by changing the voting age from 21 to 18//

good information, thanks. rajiv was including a certain section(may be for his advantage), yet he didnt force(punish) people for not voting.
my view is do not force anyone to do anything, that is not real democracy. in gujarat it will start with voting, tomorrow people will be forced to do something else that modi wants.

Samuel | சாமுவேல் said...

//யாராவது உங்களை திட்டி எல்லாம் கமெண்ட் போட்டாங்களா, கமெண்ட் moderation வச்சி இருக்கீங்க ? //

சில பதிவுகளில் எழுத குடாத வார்த்தைகள் பார்த்திருக்கேன், அது நம்ம பதிவிலும் வர குடாதுன்னு தான் எச்சரிக்கை....வேற ஒன்னும் இல்லை, தாராளமா திட்டலாம், பட் no bad words pls.