Friday, January 1, 2010

டபுள் போனஸ்

2009 வருடம் விறு விறுன்னு கடந்து போயிடுச்சுங்க, ஏதோ ஒரு பெரிய கினறு தாண்டின மாதிரி இருக்கு, வேற என்னங்க பண்றது இந்த பொருளாதார மந்த நிலைமை பிரச்சினை தான். புது வருடம் 2010 எல்லாருக்கும்,குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு சமாதானம், சந்தோஷம் நிறைந்த வருடமாக இருக்க வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்.  எனக்கு இருந்த ஒரு பெரிய கெட்ட பழக்கத்தை இந்த வருடம் விட்டரலாம்னு இருக்கேன், இணையத்தில் பதிவுகள் எழுதுவதை விட, பின்னுட்டம் எழுதுவது தான் எனக்கு பிடித்தம், ஆனால் பதிவுகள் எழுதும் போது வார்த்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவும், அடுத்தவர் பதிவில் பின்னுட்டம் எழுதும் போது சில சமயம் விடபடுகிறது, இதினால் சிலரை வெறுப்பு ஏத்தி விட்டதாக எனக்கு தோன்றிகிறது. சோ பின்னுட்டங்கள் ஒருவர் எழுதும் கருத்தை பற்றி மட்டுமே, தன்மையாக எழுத பழகவேண்டும்.

சென்ற வருடம் நிகழ்வுகளில் ரொம்ப நியாபகம் உள்ள விஷயம், பொது தேர்தல் முடிவுகள் தான். பா. ஜ .கா ஆட்சி அமையாதது முதல் சந்தோஷம்னா , கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் பங்கு இல்லாமல் போனது, டபுள் போனஸ் சந்தோசம்.

விளையாட்டு துறையில் ஆஸ்திரேலியா யாருடனாவது தோற்று போனால் சந்தோஷமா இருக்கும் , அதுவும் போன வருடம், ஏதோ சாம்பல் வச்சு தொடர் இருக்காமே? அதில் தோற்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இங்க்ளிஷ்காரன் பாண்டிங் முஞ்சில கரிய புசிடாங்க.

.

.

ஓகே வாசக்க்ஸ், இதுக்கு மேல சரியா எழுத வரமாட்டிக்குது அடுத்த பதிவில் சந்திக்கலாம்...பை பை....


.

No comments: