Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts

Friday, November 20, 2009

தவறான ஒப்பீடுகள் ?

சச்சின் தேசியவாதி இல்லையாம்(அப்ப என்ன தீவிரவாதியா?),ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். ரொம்ப எளிதா இவிங்க இதில் சேர்க்காமல் விட்ட விஷயம், நண்டிக்ரம்,லால்கர்க்,சிங்கூர் இந்த இடங்களில் ஏழை மக்கள் ஒடுக்கப்பட்டு,கொல்ல பட்ட சம்பவத்தை,ஏன்னா இவிங்க கம்யூனிஸ்ட் போல இருக்கு,அந்த சம்பவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..சார் இப்படி சச்சின் நாட்டில் நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டா அவர் அரசியல்ல இருக்காருன்னு அர்த்தம்,இப்போதைக்கு அவர் BCCIல சம்பளம் வாங்கிட்டு இருக்கார்,அவர் பொது வாழ்கையில் இல்லை.அவர் BCCI contract நிறைய விஷயங்களை தடுக்கலாம்,அறிக்கைகளையும் சேர்த்து.இப்ப குட அவர் சொன்ன அறிகையை கவனமா படிச்சு பாருங்க.


மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மேல் சுத்தமா அக்கறை இல்லை அப்படின்னு இவர் சொல்றார், யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இவர் அதற்காக ஒப்பிட்ட நிகழ்ச்சியை பார்ப்போம், மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ? ..வேற ஒப்பிடே கிடைக்கலையா இவருக்கு. மலேசியாவில் போராட்டம் பண்ணவங்க எல்லாரும் மலேசியா குடிஉரிமை பெற்றவர்கள், போராட்டமே அங்கு சம உரிமை கேட்டு தான். இதையும் இந்திய குடிஉரிமை பெற்ற மாணவர்கள் அடித்த சம்பவத்தையும் எப்படி ஒப்பிடலாம், இப்பெல்லாம் வெளிநட்டு தமிழ் மக்களை அடித்தால், நெஞ்சம் பொறுக்குதில்லையே அப்படின்னு நாலு பதிவு எழுதிட்டு, டீ கடை பெஞ்சில் பத்து நிமிஷம் அதை பத்தி பேசிட்டு, நம்ம கடமை முடிஞ்சுதுடானு போயிட்டே இருக்காயங்க, சமீபத்தில் நடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு உதாரணம்.


மதங்கள் எதிரா விமர்சினம் பண்ணும் இவர், கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி என்ன சொல்றார், மத வல்லுனர்கள் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை ரொம்ப எளிதா கண்டுபிடிச்சு எழுதிருக்கார், நோவா ஆறு நாளில் கப்பல் கட்டினார் ..சார் கருத்தை ஆழமா சொல்ல முயற்சி பண்ணுங்க தப்பு இல்லை, அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. இதை விடுங்க இவர் அடுத்து கேட்ட கேள்வி...ஆப்ரிக்கா யானை, ஆசிய யானை இதில் எந்த யானை ஏறுச்சு ? டினோசார் ஏற்ற மாதிரி சொல்லவே இல்லையே ? பரபரப்பா கேள்வி கேட்டார். இந்த கேள்வி படிச்சா தூக்கி வாரி போட்டுது. ஏன்னா பொதுவா மத நம்பிக்கை இல்லாதவர்கள், அறிவியல் அதற்கு சொல்லும் காரணங்களை கேட்டு தான் விவாதிப்பார்கள். சார் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அண்டார்டிகா யானை அப்படின்னு ஒன்னு தோன்றலாம், அதற்கு அறிவியலில் evolution அப்படின்னு சொல்றாங்க. அப்ப டினோசர் ? அணைத்து வாழும் உயிரினங்கள் ஒவ்வொரு ஜோடியும் ஏற்ற பட்டதுன்னு இவரே சொல்றார்..100-120 வருடம் கட்டிய கப்பலில் அந்த டினோசர் ஏற்ற இடம் இருந்திருக்கும், எதற்கு இந்த கேள்வி ? சரி பதில் திருப்தி இல்லையா. உங்க வழியிலே வரேன், ஒவ்வொரு உயிரினமும் ஒரு குடும்பத்தை சேர்ந்தது, டினோசார், பள்ளி குடும்பம். சிறுத்தை பூனை குடும்பம், ஓநாய் நாய் குடும்பம்..சோ உங்க கணக்கு படி ஆறு நாள்(பொய்)கட்டிய கப்பலில் சின்ன பள்ளி ஏறி, அப்புறம் ஆயிரம் வருடம் கழித்து டினோசார் உருவாகி இருக்கலாம்(இங்க காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்கேன்...மொக்கையாகவும் தோன்றலாம்).அவர் நம்பிக்கை ஏற்ற பதில் என்று நினைகிறேன்.